ninaipathellam

 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை இறைவன் வீட்டினிலே



எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்

மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

Comments

Popular posts from this blog

On Children - Khalil Gibran

Let it go by Balu

கசப்பான உண்மை